பல்லடம் அருகே குளிர்பான குடோனில் பணியாற்றிய 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் தொழிலாளர் நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தப்பியோடி உள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே MVS நகரில் தனியார் குளிர்பான சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இதில் பெரும்பாலானோர் பீகார், உத்திரபிரதேசம் போன்ற வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக தொழிலாளர் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 



இதன் அடிப்படையில் இன்று குளிர்பான சேமிப்பு கிடங்கில் திருப்பூர் தொழிலாளர் துறை மூன்றாம் சரக உதவி ஆய்வாளர் சுகந்தி மற்றும் குழந்தைகள் நலக்குழு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 



இதில் குளிர்பான சேமிப்பு கிடங்கில் பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 14 முதல் 18 வயதுடைய 12 குழந்தை தொழிலாளர்கள் இரண்டு மாதங்களாக 12,000 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வருவது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில் ஆறு குழந்தை தொழிலாளர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.



இதை அடுத்து 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு திருப்பூரில் உள்ள குழந்தைகள் நல மையத்திற்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தியதற்காக குளிர்பான சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மீது குழந்தைகள் மற்றும் வளரினம் பருவ தொழிலாளர் முறைபடுத்துதல் மற்றும் தடுத்தல் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் குழந்தைகள் நல மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 பேரையும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் தப்பி ஓடிய ஆறு குழந்தை தொழிலாளர்களையும் தேடி பிடித்து மீட்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்பான சேமிப்பு கிடங்கில் 12 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...