அரசு பேருந்தில் பேராசிரியையிடம் தங்க நாணயத்தை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை குனியமுத்தூர் வழியாக செல்லும் அரசு பேருந்தில் பயணித்த தமிழ்ச்செல்வி என்ற பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத பெண் பயணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சுகுணாபுரம் அருகே அரசு பேருந்தில் தனியார் கல்லூரி பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோவை மாவட்டம் மதுக்கரையை சேர்ந்த மாரப்பன் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி (57). இவர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டவுன்ஹால் சென்ற தமிழ்ச்செல்வி ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் காந்திபுரத்தில் இருந்து மதுக்கரை செல்ல அரசு பேருந்தில் ஏறி வந்துள்ளார். அப்போது சுகுணாபுரம் மைல் கல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது கைப்பை பேருந்தில் விழுந்ததாக தெரிகிறது. 

அப்போது அந்தப் பையில் இருந்த ஏடிஎம் கார்டு மற்றும் ஒரு சவரன் தங்க நாணயத்தை வைத்திருந்த மஞ்சள் பை மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அருகில் அமர்ந்திருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும் மாயமானது தெரியவந்தது. 

இதையடுத்து, தமிழ்ச்செல்வி குனியமுத்தூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்க நாணயத்துடன் தப்பிச்சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் பேராசிரியையிடம் இருந்து தங்க நாணயம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...