உதகை அருகேயுள்ள நியாயவிலை கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

நீலகிரி மாவட்டம் உதகை, நொண்டிமேடு, பாம்பே கேசில் பகுதிகளில் உள்ள கூட்டுறவு நிறுவனம், நியாய விலை கடைகளில், மாவட்ட ஆட்சியர் அம்ரித் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.



நீலகிரி: உதகை அருகேயுள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் பொது விநியோக திட்டத்தினை வலுப்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக உதவ முடியும் என்பதன் அடிப்படையில் தமிழக அரசு நியாய விலை கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உதகை, நொண்டிமேடு மற்றும் பாம்பே கேசில் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை மற்றும் நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, ராகி, பாமாயில், பொருட்கள் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டார்.

மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சி படுத்தப்பட்டு உள்ளதா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், நியாய விலை கடை பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...