மாற்றுத்திறனாளி கைப்பந்து வீராங்கனைக்கு கோவை டி.ஐ.ஜி பாராட்டு!

நேபாள நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.



கோவை: நேபாள நாட்டில் நடைபெற்ற மாறுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் பாராட்டினார். 

நேபாள நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் (International Open Kathmandu Sitting Volleyball Championship) போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில், கோவை சரக அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு, கோவையில் உள்ள இந்தியா பாரா வாலிபால் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இந்திரா என்பவர் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

இதனை அறிந்த கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார், வெற்றி பெற்ற மாற்றத்திறனாளி கைப்பந்து வீராங்கனையை பாராட்டும் விதமாக கோவை காவல் சரக அலுவலகத்தில் வைத்து பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...