மாற்றுத்திறனாளி கைப்பந்து வீராங்கனைக்கு கோவை டி.ஐ.ஜி பாராட்டு!

நேபாள நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.



கோவை: நேபாள நாட்டில் நடைபெற்ற மாறுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் பாராட்டினார். 

நேபாள நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் (International Open Kathmandu Sitting Volleyball Championship) போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில், கோவை சரக அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு, கோவையில் உள்ள இந்தியா பாரா வாலிபால் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இந்திரா என்பவர் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

இதனை அறிந்த கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார், வெற்றி பெற்ற மாற்றத்திறனாளி கைப்பந்து வீராங்கனையை பாராட்டும் விதமாக கோவை காவல் சரக அலுவலகத்தில் வைத்து பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...