வால்பாறை அருகே அருவியில் தவறி விழுந்த இளைஞர் உடல் மீட்பு!

வால்பாறை அருகே சுற்றுலா வந்த ஜாகர் (21) என்ற இளைஞர், பிர்லா அருவியில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்து மாயமானார். இவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஜாகரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.



கோவை: வால்பாறைக்கு சுற்றுலா வந்து அருவியில் புகைப்படம் எடுக்கும் போது நீரில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞர் உடல் 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜாஜூ என்பவரது மகன் ஜாகர் (21). இவர் தனது தோழியுடன் கடந்த 28ஆம் தேதி வால்பாறை பகுதியில் சுற்றி பார்த்துவிட்டு சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா அருவிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அருவி அருகில் புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது கால் தவறி ஜாகர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கூறப்படுகிறது.



அதைத்தொடர்ந்து காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் அவருடைய உடலை தீவிரமாக தேடி வந்தனர். 



இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு இன்று உடல் மீட்கப்பட்டது, அவருடைய உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...