பால் பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் - மூவர் மீது வழக்குப்பதிவு!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பால் பண்ணை நடத்தி வரும் அபிநயா என்பவர் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை அமைக்க மணிகண்டன் - பாரதி தம்பதியிடம் குத்தகை பணமாக ரூ.51.50 லட்சம் கொடுத்த நிலையில், பால் பண்ணை அமைக்க கூடாது என மிரட்டிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பால்பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவை ஆர்.எஸ்.புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் அபிநயா. இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்கு சொந்தக்காரர் என்று கூறி மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் பால் பண்ணை நடத்துவதற்காக காலி இடத்தை வாடகைக்கு கொடுப்பதாக கூறி உள்ளனர். 

அங்கு மாட்டு பண்ணை வைப்பதற்கு ரூ.60 லட்சம் செலவாகும் என்று அபிநயா கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாராளமாக மாட்டு பண்ணை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். இந்த மாட்டு பண்ணைக்கு மாத வாடகையாக ரூ.30 ஆயியம் எனவும் அட்வான்ஸ் தொகையாக ரூ.3 லட்சம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இவ்வாறாக 3 மாத காலமாக வாடகையை பெற்று கொண்டிருந்த மணிகண்டன் உள்ளிட்டோர் மீண்டும் இந்த இடத்திற்கு வாடகை வேண்டாம் என அவர்களுக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி குத்தகையாக மாற்றிக் கொள்ளலாம் என பத்து வருடத்திற்கு பேசி முடிவு செய்தனர். தொடர்ந்து மணிகண்டன் மற்றும் பாரதி வங்கி கணக்குகளிலும் ரூ.21 லட்சத்து 50 ஆயிரமும், பணமாக ரூ.30 லட்சமும் என 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அபிநயா கொடுத்தார். 

இதற்கிடையில் அந்த வளாகத்தில் மாட்டுப்பண்ணையை ஆரம்பித்து 20 மாடுகளும், பால் விற்பனைக் கடை என கட்டுமான பணிகளை 65 லட்ச ரூபாய்க்கு மேற்கொண்டனர். ஆனால் மணிகண்டன் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்ய மறுத்து காலதாமதம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மாட்டு பண்ணை நடந்து வந்த நிலையில் திடீரென சிலபேர் மாட்டு பண்ணையை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

வீரகேரளத்தை சேர்ந்த நிர்மலா, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பாலசிங்கம், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கவிதா ஆகியோர் போன் மூலமும் நேரிலும் வந்து பால்பண்ணை உரிமையாளர் அபிநயாவை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அபிநயா புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலசிங்கம், வீர கேரளம் பகுதியை சேர்ந்த நிர்மலா, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கவிதா ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...