கோவையில் பிளக்ஸ் பேனர் வைத்த போது விபத்து - 3 பேர் பலி

கருமத்தம்பட்டி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிளக்ஸ் பேனர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் அவசரகதியில் இறங்கியதால், பேனர் கம்பி சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பிளக்ஸ் பேனர் வைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கருமத்தம்பட்டி அடுத்த தெக்கலூர் அருகே 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிளக்ஸ் பேனர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். 



அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், பெரிய பேனர் பேனல் காற்றில் ஆடியது, இதையடுத்து அனைவரும் அவசரகதியில் இறங்கிய போது, பேனர் பேனல் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.





இந்த விபத்தில் கீழே விழுந்த குணசேகரன் (52), குமார் (50), குமார் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.



இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ கருமத்தப்பட்டி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பேனர் வைத்த போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...