பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 2.80 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஹக்கீம் (39) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.80 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ஆனைமலை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஆனைமலை ஆற்றுப்பாலம் அருகே கஞ்சாவுடன் வலம் வந்த ஹக்கீம் (39) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 2.80 கிலோ கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த ஹக்கீம் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து அதனை ஆனைமலை பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...