மதிமுகவில் இருந்து விலகினார் துரைசாமி!

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுங்கள் என வைகோவுக்கு கடிதம் எழுதிய மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும், திமுகவுக்கு தனது ஆதரவு என்றும், தான் எந்த கட்சியிலும் இணைய போவதில்லை எனவும் கூறியுள்ளார்.


திருப்பூர்: மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மதிமுகவின் அவைத்தலைவர் துரைசாமி அறிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் மதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அண்மை காலமாக துரை வைகோவின் வருகைக்குப் பிறகு அதிருப்தியில் இருந்த மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கடந்த மாதம் மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள் என வைகோவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுகவின் அவைத் தலைவர் துரைசாமி பேசியதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

திமுகவுக்கு எனது ஆதரவை மட்டும் அளிக்கிறேன். எந்த கட்சியிலும் இணைய போவதில்லை. எனது தொழிற்சங்கத்தை தொடர்ந்து நடத்த இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...