சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மேயரிடம் அதிமுக உறுப்பினர்கள் மனு!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டி வரும் கேரளா அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாநகராட்சி மேயரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

திருப்பூர்: சிறுவாணியின் குறுக்கே கேரள அரசின் அணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரி மேயரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக குழு தலைவருமான அன்பகம் திருப்பதி கூட்டத்தில் பேசினார்.



அப்போது அவர் பேசியதாவது, திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு பாதிக்கக் கூடிய வகையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன் பாதிப்பை உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.



இது தொடர்பாக பேசிய மாநகராட்சி மேயர் ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட அமைச்சர்கள் மூலமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் திருப்பூரில் தண்ணீர் வரத்து பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...