கோவையில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - பரபரப்பு!

தூத்துக்குடியை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் ஜெகன், துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போது, குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்ப பிரச்சினை காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் பெருமாள் குளத்தை சேர்ந்தவர் ஜெகன் (32). இவர், துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் பயிற்சி கல்லூரியில் (சி.ஆர்.பி.எப்) பாதுகாப்பு பணியில் (கோட்டர் கார்டு காப்பு அலுவலில்) ஈடுபட்டு வந்துள்ளார். இவர் 77 பட்டலியன் ஏ கம்பெனியில் பணியாற்றி வந்தார். 

இதனிடையே இவரது முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 2வது திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக குடும்ப பிரச்சனை பெரிதாகி உள்ளதாக தெரிகிறது. 

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் இன்று மதியம் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, தனக்குத்தானே எஸ்.எல்.ஆர் துப்பாக்கியால் 2 ரவுண்டு கழுத்தில் சுட்டுக்கொண்டார். அவர் சுட்டபோது குண்டு கழுத்தில் இருந்து தலையின் வழியாக சென்றுள்ளது.



இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.



இதனை தொடர்ந்து ஜெகனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகன் சுட்டுக்கொண்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...