ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிஎஸ்கே - கோவையில் ரசிகர்கள் ‘விசில் போடு’ இருசக்கர பேரணி!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக கோவை பந்தய சாலை பகுதியில் ஏராளமான ரசிகர்கள் ஒன்றிணைந்து, சிஎஸ்கே ஜெர்சி அணிந்தபடி, விசில் போடு என்ற இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.



கோவை: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியதை கொண்டாடும் விதமாக கோவையில் ரசிகர்கள் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர். 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை அடுத்து கோவையில் வாகன பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டும் தோனியின் புகைப்படத்துடனும் சாலையில் ஊர்வலமாக சென்றனர்.



முன்னதாக பட்டாசு வெடித்து மேளதாளம் அடித்து விசில் போட்டு அவர்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.



மேலும் இந்த வருடம் கோப்பையை நாம் நிச்சயம் வெல்வோம் என கோசத்தை முழக்கங்களையும் எழுப்பி சாலையில் உர்வலமாக வந்தனர். 

சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) அதிகாரப்பூர்வ 'ஸ்ட்ராங் பிஸ்கட் பார்ட்னர்' ஐடிசி சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் பிஸ்கட்கள் சார்பாக இன்று பந்தய சாலையில் இருந்து 'ஸ்ட்ராங்கா விசில் போடு' இரு சக்கர பேரணி நடை பெற்றது. 



மேலும் 28 தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 2023 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே தயாராகி வருவதைக் கொண்டாடவும் ஊக்குவிக்கவும் இந்த நிகழ்ச்சி அர்ப்பணிக்கப்பட்டது. அதிக ஆற்றல் கொண்ட அணிவகுப்பு நூற்றுக்கணக்கான ரசிகர்களை ஒன்றிணைத்தது, அவர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 



சிஎஸ்கே ரசிகர்கள், தங்கள் அணி வண்ணங்களில் அணிவகுத்து, ஊர்வலத்தில் உற்சாகமும் உற்சாகமும் நிறைந்து, பந்தய சாலையில் நடனம் மற்றும் விசில் அடித்து குதூகலத்தையும் உற்சாகத்தையும் உருவாக்கினர். நகரம் முழுவதும் ஒரு மாபெரும் விசில் ஒலி எழுப்பப்பட்டது. 



மேலும், சிஎஸ்கே-ஐ ஆதரவாளர்கள் #Strongaa Whistle Podu என்று ஆரவாரம் செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...