பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் - கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு!

பாஜக மாநில பொதுச்செயலாளரான ஏ.பி.முருகானந்தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு பாஜக சார்பில் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.



கோவை: பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. 

பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். 



அதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜக பிரச்சார பிரிவின் மாநில செயலாளர் வி.என்.ராஜன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து சங்கனூர் பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் குமார் முன்னாள் மாவட்ட துணை தலைவர் மதன்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...