கோவை மாநகரில் 14 பெண் காவலர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் - டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார்!

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையில் பெண் காவலர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டு, கனரக வாகன பயிற்சி முடித்த 14 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் 14 பெண் காவலர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார். 

தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோவை மாநகரில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காவல்துறையில் பெண்கள் இல்லாத பிரிவுகளில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களில் கனரக வாகனம் ஓட்ட விருப்பமுள்ள காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு காவல்துறை சார்பில் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சியில் காவல்துறை பேருந்து, வஜ்ரா வாகனம் உள்ளிட்ட அனைத்து வகை கனரக வாகனங்களும் ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் கனரக வாகனங்கள் ஓட்டி பயிற்சி பெற்ற 14 பெண் காவலர்களுக்கு பேட்ச் போடப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பெண் காவலர்களுக்கு வழங்கினார். 

அதேபோல மோப்பநாய் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு இளம் பெண் பட்டதாரி பெண் காவலர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...