கோவை சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது - ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

சூலூர் அடுத்த பள்ளபாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சரவணன், அஸ்வின், சுஜித், மற்றும் கிரிதரன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்க காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை பள்ளபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அப்பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சரவணன், அஸ்வின், சுஜித், மற்றும் கிரிதரன் உள்ளிடோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் சரவணன், அஸ்வின் மற்றும் சுஜித் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நடைபெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...