வெள்ளலூர் அருகே மதுபோதையில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலியான சோகம்!

வெள்ளலூர் அடுத்த நஞ்சுண்டாபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்த ஜெயக்குமார்(45) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் குடிபோதையில் ஆலமரத்தின் மீது ஏறிய அவர், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோவை: கோவை வெள்ளலூர் அருகே மதுபோதையில் ஆலமரத்திலிருந்து கீழே விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் லியான சோகம்.

கோவை நஞ்சுண்டாபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி என்பவரது மகன் ஜெயக்குமார் (45). பெயிண்டரான இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். ஜெயக்குமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகுணா ஜெயக்குமாரை பிரிந்து திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. 

அப்போது, மது போதையில் வந்த ஜெயக்குமார் அப்பகுதியில் இருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்த ஜெயக்குமார் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...