வெள்ளலூர் அருகே மதுபோதையில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலியான சோகம்!

வெள்ளலூர் அடுத்த நஞ்சுண்டாபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்த ஜெயக்குமார்(45) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் குடிபோதையில் ஆலமரத்தின் மீது ஏறிய அவர், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோவை: கோவை வெள்ளலூர் அருகே மதுபோதையில் ஆலமரத்திலிருந்து கீழே விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் லியான சோகம்.

கோவை நஞ்சுண்டாபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி என்பவரது மகன் ஜெயக்குமார் (45). பெயிண்டரான இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். ஜெயக்குமார் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகுணா ஜெயக்குமாரை பிரிந்து திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. 

அப்போது, மது போதையில் வந்த ஜெயக்குமார் அப்பகுதியில் இருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்த ஜெயக்குமார் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...