கோவை அருகே ஆசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - பரபரப்பு!

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த அம்ஜத் அகமது (19) என்ற மாணவர், தேர்வில் காப்பி அடித்ததால் பெற்றோரை அழைத்து வர கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவர் கல்லூரியின் 2வது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வேலந்தாவளம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில், ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அம்ஜத் அகமது (19). இவர் கோவை அருகே கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாதிரி தேர்வு நடைபெற்றது.

அப்போது மாணவர் அம்ஜத் அகமது, தேர்வு எழுதும் போது காப்பி அடித்ததாக தெரிகிறது. இதனை தேர்வு மையத்தில் பணியில் இருந்த 2 பேராசிரியர்கள் பார்த்து மாணவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர். மேலும் தேர்வில் காப்பியடித்தற்காக மாணவரிடம் பெற்றோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தகவலறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே கல்லூரி மாணவரை பெற்றோரை அழைத்து வர கட்டாயபடுத்தி மிரட்டிய ஆசிரியர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...