ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் என புதிய தமிழகம் கிருஷ்ணாசாமி பேட்டி

விவசாயத்துக்கு மட்டும் நிலம் கிடையாது எனவும், ஹைட்ரோ கார்பன் எடுக்க பைப் நடுவதன் மூலம் புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் எரிவாயு உள்ளிட்டவைகளை சொந்த நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை புதிய தமிழகம் கட்சி ஏற்று கொள்கிறது என கூறினார்.

மேலும், ஹைட்ரோ கார்பன் எடுக்க குழாய்கள் நடுவதன் மூலமாக புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும், அப்படி வந்தால் பெட்ரோல், டீசல் எடுக்கும் அரேபிய நாடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் செத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கையே சரியல்ல என கூறிய அவர், விவசாயத்துக்கானது மட்டும் நிலம் கிடையாது எனவும், இந்தியாவில் எங்கும் பெட்ரோல் டீசல் எடுக்க கூடாது என்றால் எங்கு சென்று வாங்குவது எனவும் கேள்வி எழுப்பினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த கூடாது என்றால் வாகனங்களை எப்படி ஓட்டுவது, மேக்கின் இந்தியா திட்டம் என்ன என கூறிய அவர், இருக்கிற இடத்தில் தான் அவற்றை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு குறித்து பேசிய அவர், கடந்த 50 ஆண்டு காலத்தில் பள்ளி கல்வியை மேம்படுத்தாததன் காரணமாகவே தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டிய நிலை உள்ளதாக கிருஷ்ண சாமி அப்போது கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...