கோவையில் பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்காததால் திருப்பூர் விவசாயி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் அடுத்த அவிநாசியை சேர்ந்த பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யும் விவசாயி வேலுச்சாமி, ரூ.70 மதிப்புள்ள தனது பட்டுக் கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில், ரூ.30க்கு கேட்டதால் ஆத்திரமடைந்த வேலுசாமி, பட்டுக்கூடுகளை அங்காடியின் முன்பு தரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.



கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் பட்டுக்கூடு அங்காடியில் உரிய விலை கிடைக்காததால் விவசாயி ஒருவர் தனது பட்டுக்கூடுகளை தரையில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் பல ஆண்டு காலமாக பட்டு கூடு உற்பத்தி செய்து வருகிறார். வேலுச்சாமி உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் வைத்து ஏலத்திற்கு விடுவது வழக்கம்.

அப்படி இன்று வழக்கம் போல அவர் கொண்டு வந்த இரண்டாம் தர பட்டுக்கூடை ஏலத்திற்கு விட்ட பொழுது இடைத்தரகர்கள் கிலோ 30 ரூபாய்க்கு கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அவர் 70 ரூபாய்க்கு கொடுக்கப்படும் பட்டுக்கூடை 30 ரூபாய்க்கு தரமாட்டேன் என தெரிவித்துள்ளார். இதனால் இடைத்தரகர்கள் வாங்க மறுத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தனக்கு உரிய விலை கிடைக்காததால் கொண்டு வந்த பட்டுக்கூடை மீண்டும் கொண்டு சொல்ல மாட்டேன் எனக்கூறி பட்டுக்கூடை அங்காடி முன்பு கொட்டி தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் தனக்குரிய 70 ரூபாய் விலையை தர வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இதற்கு பட்டுக்கூடு அங்காடியின் அதிகாரிகள் வேலுச்சாமி கொண்டுவந்த பட்டுக்கூடு பயனற்றது என்றும் இதை அவர் சொல்லும் விலைக்கு எடுக்க முடியாது என்றும், தரத்திற்கு ஏற்ற விலை தான் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...