கோவை திறந்தவெளி சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிறைவாசிகளுக்கு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் சிறைவாசிகள் அவர்களின் தண்டனை காலத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும் அதன் மூலம் வருவாய் ஈட்டவும் விவசாய தொழிலை முதன்மையாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். 

மேலும் அவர்களுக்கு கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். 



காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படியும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் உலக தேனீ வளர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை "கவின் தேனீ பண்ணை சார்பாக தேனீ வளர்ப்பு நிபுணர் ரஞ்சித்பாபு மூலம் சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சியும், அதனை விற்பனை செய்யும் முறைகள் குறித்து சிறைவாசிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...