கோவை திறந்தவெளி சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிறைவாசிகளுக்கு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் சிறைவாசிகள் அவர்களின் தண்டனை காலத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும் அதன் மூலம் வருவாய் ஈட்டவும் விவசாய தொழிலை முதன்மையாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். 

மேலும் அவர்களுக்கு கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். 



காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படியும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் உலக தேனீ வளர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை "கவின் தேனீ பண்ணை சார்பாக தேனீ வளர்ப்பு நிபுணர் ரஞ்சித்பாபு மூலம் சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சியும், அதனை விற்பனை செய்யும் முறைகள் குறித்து சிறைவாசிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...