வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் - கோவை மாநகராட்சி துணை ஆணையருக்கு பதவி உயர்வு!

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை: கோவை உட்பட 25 மாவட்டங்களில் உள்ள வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பி.எஸ்.லீலா அலெக்ஸ், சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்கு கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதேபோல் பெருநகர சென்னை நகராட்சி மண்டல அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) முதுநிலை மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Newsletter

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...