வால்பாறையில் பெண் சிறுத்தை உயிரிழப்பு - 2 சிறுத்தைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!

வால்பாறை அடுத்த சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அதில், சிறுத்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: வால்பாறை அருகே சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், சிறுத்தை உயிரிழந்ததை உறுதி செய்தனர்.



பின்னர், ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் பார்கவேதேஜா உத்தரவின் பேரில், வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் உதவி வன பாதுகாவலர் செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், சேக்கல்முடி எஸ்டேட் மேலாளர் துருபாக்யோதி ஆகியோர் முன்னிலையில் சிறுத்தையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது.



பின்னர் ஆய்வக பரிசோதனைக்காக உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.



முடிவில் சிறுத்தையின் உடல் தீயிட்டு சம்பலாகும் வரை எரியூட்டப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தை சுமார் 6 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை எனவும், மற்ற சிறுத்தைகளுடன் சண்டையிட்டு இருந்திருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...