வீட்டு வாடகையை அரசு நிர்ணயிக்க வேண்டும்..! - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் வாடகை வீடுகளின் வாடகையை அரசாங்கம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக மக்கள் விடுதலைக் கட்சியினர் மனு அளித்தனர். சாதி மதம் கேட்டு வாடகைக்கு வீடு தரமறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: தமிழக மக்கள் விடுதலை கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.



அதில், கோவை மாவட்டத்தில் வாடகை வீடுகளின் எண்ணிக்கையை அரசாங்கம் தொகுக்க வேண்டும். வாடகை வீடுகளில் வாடகை தொகையை சதுர அடி அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.

சாதி மதம் கேட்டு வாடகைக்கு வீடு தரமறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் வீட்டு வாடகை செலவை அரசாங்கமே ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



இந்த மனுவை கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தின் பொது செயலாளர் வெள்ளிமலை தலைமையிலான குழுவினர் ஆட்சியரிடம் அளித்தனர்

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...