ராஜீவ்காந்தி நினைவு தினம் - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு நாளையொட்டி கோவையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.


கோவை: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாளையொட்டி, கோவை மாநகராட்சி ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் தலைமையில் விளாங்குறிச்சியில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



அப்போது, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சரவணம்பட்டி ரகுராமன், விளவை கோபால், முருகேசன், சுந்தரசாமி, கலைச்செல்வன், விவேகானந்தன், முருகானந்தம் மருதாச்சலம், வெங்கடேஷ் மணி, ரங்கசாமி, பாலு மணிக்குமார், முரளி கிருஷ்ணன், சுரேஷ் பொன்னுச்சாமி, துரைசாமி பட்டிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதேபோல், முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் முன்னிலை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி எம் சி மனோகரன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருண்குமார் புருஷோத்தமன் சுரேஷ்குமார் வேலவன் பாலாஜி இந்து ராஜ் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சூரஜ் ரங்கசாமி அருள் அந்தோணி, மணி குமார் கோகுல் அப்பாஸ் ராஜேஷ் கிருஷ்ணராஜ் சரவணகுமார் சௌந்தர் பிரகாஷ் வெங்கடேஷ் முரளி கிருஷ்ணன் நிசாரூதீன் சீனிவாசன் முருகானந்தம் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...