மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பெண்ணின் பர்சை திருட முயற்சி - கேரளா பெண்கள் கைது…!

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தனது மனைவியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 22 வயது இளம்பெண் ஒருவர் ரங்கநாதன் மனைவி கையிலிருந்த பர்சை திருடி தப்ப முயன்றபோது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெண்ணிடம் பர்சை திருட முயன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை சாலை சங்கர் நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தனது மனைவியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 22 வயது இளம்பெண் ஒருவர், திடீரென ரங்கநாதன் மனைவி கையில் வைத்திருந்த பர்சை திருடிவிட்டு, அதை அருகே இருந்த மற்றொரு 25 வயது பெண்ணிடம் கொடுத்துவிட்டு இருவரும் தப்ப முயன்றனர்.

அப்போது அவர்கள் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் தப்ப முயன்ற இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் பொம்மை விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...