கோவையில் குழந்தையின் படுக்கையில் புகுந்த நல்ல பாம்பு - பெற்றோர் அச்சம்!

கோவை போத்தனூர் அருகே தாய் ஒருவர் குழந்தைக்கான படுக்கையில் (Baby Bed) தனது குழந்தையை படுக்க வைத்துவிட்டு அதனை இழுத்த போது, அதற்கு அடியில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடிவீரர் மோகன், நல்ல பாம்பை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டுள்ளார்.


கோவை: போத்தனூர் அருகே குழந்தைக்கான படுக்கையில் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போத்தனூர் அருகே தாய் ஒருவர் குழந்தைக்கான படுக்கையில் (Baby Bed) தனது குழந்தையை படுக்க வைத்துள்ளார். இதனையடுத்து, அந்த படுக்கையை இடம் மாற்றுவதற்காக அதனை இழுத்துள்ளார்.

அப்போது, அந்த படுக்கைக்கு அடியில் நல்ல பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட தாய் குழந்தையை உடனடியாக தூக்கி கொண்டு அறையை விட்டு வெளியில் கொண்டு வந்துள்ளார்.

தொடர்ந்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த பாம்பு பிடி வீரர் மோகனுக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பிடி வீரர் மோகன், குழந்தையின் படுக்கைக்கு அடியில் இருந்த நல்ல பாம்பை லாவமாக பிடித்து பிளாஸ்டிக் குடுவைக்குள் அடைத்தார். பின்னர் அந்த நல்ல பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தார்.

குழந்தையின் படுக்கையில் இருந்த பாம்பு அதிர்ஷ்டவசமாக குழந்தையை எதுவும் செய்யாமல் இருந்ததாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...