கோவை வடக்கு மண்டலத்தில் வரும் 25ஆம் தேதி சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!

கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண். 4, 10, 11, 21 ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் சரவணம்பட்டி வார்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தங்களது சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் முதல்முறையாக மண்டல தலைவர் வே.கதிர்வேலின் உத்தரவின் பேரில் வரும் 25 ஆம் தேதி மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், வார்டு எண். 4,10,11, 21 பகுதிகளில் உள்ள வரிதாரர்கள் தங்களது சொத்துவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் பெயர் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம் மற்றும் முடிவுற்ற பழைய சொத்துவரி புத்தகங்களுக்கு புதிய சொத்துவரி புத்தகம் பெறலாம்.

இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் பெயர் திருத்தம், இனிஷியல் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம், தொலைபேசி எண் திருத்தம் மற்றும் பதிவு செய்தல் முடிவுற்ற சொத்துவரி புத்தகத்திற்கு பதிலாக புதிய சொத்துவரி புத்தகம் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருத்தங்களை மேற்கொள்வதற்காக வரும் பொதுமக்கள் தங்கள் சொத்துவரி செலுத்திய ரசீது நகல் (2023-24), குடிநீர் கட்டணம் செலுத்திய ரசீது நகல் (2023-24), சொத்து தொடர்பான ஆவண நகல், இதர ஆவணங்கள் ஏதேனும் ஒரு அடையான அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...