ஈஷாவுக்கு வந்த BNI-ஐ சேர்ந்த இளம் தொழிலதிபர்கள் - உடல், மன நல யோகா வகுப்புகளில் பங்கேற்றனர்!

BNI அமைப்பின்‌ கோவை ரிதம்‌ சேப்டரை சேர்ந்த 25க்கும்‌ மேற்பட்ட இளம்‌ தொழிலதிபர்கள்‌ ஈஷா யோகா மையம்‌ வந்து உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட பல்வேறு சக்திவாய்ந்த யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். மன அழுத்தம் குறைந்து உடல் நலமாக இருப்பதாக உணர்வதாக பயிற்சியில் பங்கேற்ற தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.


கோவை: ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த கோவை BNI-ஐ சேர்ந்த இளம்‌ தொழிலதிபர்கள்,‌ உடல்‌ மற்றும்‌ மன நலத்தை மேம்படுத்தும்‌ யோகா மற்றும் ஈஷா ஒரியா வகுப்புகளில் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக ஈஷா மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தொழில்‌ உலகில்‌ சக்கி வாய்ந்த பின்புலம்‌ உடைய BNI அமைப்பின்‌ கோவை ரிதம்‌ சேப்டர்‌-ஐ சேர்ந்த 25-க்கும்‌ மேற்பட்ட இளம்‌ தொழிலதிபர்கள்‌ ஈஷா யோகா மையம்‌ வந்து யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்‌.



ஈஷா சார்பில்‌ இரண்டு நாள்‌ பயிற்சியாக உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த பயிற்சிகள்‌ வழங்கப்பட்டன. மேலும்‌ ஆதியோகி திவ்யதரிசனம்‌, தியானலிங்கத்தில்‌ நாத ஆராதனை, லிங்க பைரவியில்‌ அபிஷேகம்‌, நாட்டு மாடுகளை பராமரிக்கும்‌ மாட்டுமனை உள்ளிட்ட நிகழ்வுகளில்‌ பங்கேற்றனர்‌.

BNI என்பது உலகளவில்‌ 75 நாடுகளில்‌ 300,000 உறுப்பினர்களை உடைய உலகின்‌ முன்னணி வணிக பரிந்துரை அமைப்பாகும். BNI உறுப்பினர்கள்‌ பிராந்திய தேசிய மற்றும்‌ உலகளாவிய BNI ஊழியர்களால்‌ தீவிரமாக ஆதரிக்கப்படுகிறார்கள்‌. அவர்கள்‌ தங்கள்‌ வணிகங்களை வளர்ப்பதற்கும்‌, தங்களுடைய இலக்குகளையும்‌ தாண்டி சாதிப்பதற்கும்‌ தேவையான பயிற்சி, கட்டமைப்பு மற்றும்‌ தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்‌.

இங்கு கற்றுக்கொண்ட பயிற்சிகள்‌ மூலம்‌ அவர்களின்‌ உடல்‌ மன நலம்‌, திறன்மிக்க தொழிலதிபராக தேவையான தெளிவு, கூர்மை உள்ளிட்ட பலன்கள்‌ கிடைக்கப்‌ பெற்றதாக மகிழ்ச்சியுடன்‌ பகிர்ந்து கொண்டனர்‌.

ஐங்கரன்‌ டெக்ஸ்டைல்ஸ்‌ உரிமையாளர்‌ அங்கு அய்யப்பன்‌,‌ தனது அனுபவம்‌ குறித்து பேசியதாவது, எனக்கு எப்போதும்‌ மன அழுத்தம்‌, டென்சன்‌ இருக்கும்‌. இங்கு வந்து இன்று காலை யோக பயிற்சிகள்‌ செய்த போது நிறைய மாற்றம்‌ தெரிகிறது. தொடர்ந்து ஷாம்பவி தியானம்‌ உள்ளிட்ட பயிற்சுகளை செய்து வந்தால்‌ குடும்ப வாழ்க்கை, தொழில்‌ என எல்லாவற்றிலும்‌ திறம்பட இயங்க முடியும்‌ என்று புத்துணர்வோடு பகிர்ந்து கொண்டார்‌.

பேபி வேர்ல்ட்‌ உரிமையாளர்‌ அமர்‌ கூறியதாவது, இது மிகவம்‌ வித்தியாசமான அனுபவம்‌. இந்த பயிற்சிகளை தொடர்ந்தால்‌, தொழில்‌ மற்றும்‌ வாழ்க்கையில்‌ முன்னேற்றம்‌ ஏற்படும்‌. இங்கு பரிமாறப்பட்ட உணவுகளும்‌ வித்தியாசமாகவும்‌, சத்தானதாகவும்‌ இருந்தது என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார்‌.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...