பல்லடத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் கிளப் - அனுமதி தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை!

பல்லடத்தில் Murugampalayam Health and Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட கிளப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூடவும், 90 நாட்களுக்கு திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே செயல்பட்டு வந்த தனியார் கிளப்பில் விதிமுறைகள் மீறப்பட்டதால், அனுமதி தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி பெற்று கொக்கரக்கோ என்ற பெயரில் பாருடன் கூடிய உணவகம் இயங்கி வந்தது.

நேற்றிரவு பல்லடம் திமுக நிர்வாகி ஒருவர் மது அருந்திவிட்டு இந்த பாரில் பீர் பாட்டில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், எதற்கு அதிக விலை வைத்து விற்பனை செய்கிறீர்கள் என பார் உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு உங்கள் திமுக நகர தலைவர்களில் இருந்து அமைச்சர் வரை அனைவருக்கும் மாதா மாதம் பணம் கட்ட வேண்டும். 300 ரூபாய்க்கு விற்றால்தான் என்னால் பணம் கட்ட முடியும் என தெரிவித்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.



இந்த நிலையில் இன்று மாலை கலால் துறை உதவி இயக்குனர் ராம்குமார், கோட்ட கலால் வட்டாட்சியர் ராகவி, பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சௌமியா ஆகியோர் தனியார் பாரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வின் போது நேற்றைய ஸ்டாக் எவ்வளவு என்ற கணக்கு முறையாக இல்லை எனவும், மனமகிழ் மன்ற உறுப்பினர்களை தவிர வெளி ஆட்கள் பாரை பயன்படுத்தியதும், முறையான வாகன நிறுத்துமிடம் இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தனியார் பார் 90 நாட்களுக்கு இயக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட கிளப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...