பல்லடத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் கிளப் - அனுமதி தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை!

பல்லடத்தில் Murugampalayam Health and Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட கிளப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூடவும், 90 நாட்களுக்கு திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே செயல்பட்டு வந்த தனியார் கிளப்பில் விதிமுறைகள் மீறப்பட்டதால், அனுமதி தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி பெற்று கொக்கரக்கோ என்ற பெயரில் பாருடன் கூடிய உணவகம் இயங்கி வந்தது.

நேற்றிரவு பல்லடம் திமுக நிர்வாகி ஒருவர் மது அருந்திவிட்டு இந்த பாரில் பீர் பாட்டில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், எதற்கு அதிக விலை வைத்து விற்பனை செய்கிறீர்கள் என பார் உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு உங்கள் திமுக நகர தலைவர்களில் இருந்து அமைச்சர் வரை அனைவருக்கும் மாதா மாதம் பணம் கட்ட வேண்டும். 300 ரூபாய்க்கு விற்றால்தான் என்னால் பணம் கட்ட முடியும் என தெரிவித்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.



இந்த நிலையில் இன்று மாலை கலால் துறை உதவி இயக்குனர் ராம்குமார், கோட்ட கலால் வட்டாட்சியர் ராகவி, பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சௌமியா ஆகியோர் தனியார் பாரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வின் போது நேற்றைய ஸ்டாக் எவ்வளவு என்ற கணக்கு முறையாக இல்லை எனவும், மனமகிழ் மன்ற உறுப்பினர்களை தவிர வெளி ஆட்கள் பாரை பயன்படுத்தியதும், முறையான வாகன நிறுத்துமிடம் இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தனியார் பார் 90 நாட்களுக்கு இயக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட கிளப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...