கோவையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

கோவை சாந்திமேடு அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கிழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை என்பதால், இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகியுள்ளர். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒராண்டாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது. இதனையறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...