10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கணித பாடத்தில் 3,649 பேர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.



சென்னை: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில், மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 மாணவ, மாணவியர் எழுதினர்.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9,14, 320 மாணவ மாணவிகளில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், எப்போதும் போலவே இந்தாண்டும் தேர்ச்சி சதவீதத்தில் மாணவர்களை விட மாணவிகள் 6.5 சதவீதம் அதிகம்.

இந்நிலையில், இந்த தேர்வில், ஆங்கிலம் பாடத்தில் 89 பேரும், கணிதம் பாடத்தில் 3,649 பேரும், அறிவியல் பாடத்தில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், மொழிப்பாடத்தில் யாரும் 100சதவீத மதிப்பெண்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2ஆம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 95.99 சதவீத தேர்ச்சியுடன் 4ஆம் இடத்திலும், மேலும் தூத்துக்குடி மாவட்டம் 95.58 சதவீத தேர்ச்சியுடன் 5ஆம் இடத்திலும் உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத்தேர்வு வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...