10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கணித பாடத்தில் 3,649 பேர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.



சென்னை: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில், மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 மாணவ, மாணவியர் எழுதினர்.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9,14, 320 மாணவ மாணவிகளில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், எப்போதும் போலவே இந்தாண்டும் தேர்ச்சி சதவீதத்தில் மாணவர்களை விட மாணவிகள் 6.5 சதவீதம் அதிகம்.

இந்நிலையில், இந்த தேர்வில், ஆங்கிலம் பாடத்தில் 89 பேரும், கணிதம் பாடத்தில் 3,649 பேரும், அறிவியல் பாடத்தில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், மொழிப்பாடத்தில் யாரும் 100சதவீத மதிப்பெண்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2ஆம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 95.99 சதவீத தேர்ச்சியுடன் 4ஆம் இடத்திலும், மேலும் தூத்துக்குடி மாவட்டம் 95.58 சதவீத தேர்ச்சியுடன் 5ஆம் இடத்திலும் உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத்தேர்வு வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...