மே.20ல் பொள்ளாச்சி ஆழியார் நீர்த்தேக்க திட்ட குழு தலைவர் தேர்தல் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஆழியாறு பாசனத் திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக துணை ஆட்சியர் பிரியங்கா செயல்படுவார். திட்டக்குழு தலைவருக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.


கோவை: ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி. பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன.

இந்த சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் (20-ந் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார்.

அதில், ஆழியாறு பாசனத் திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக துணை ஆட்சியர் பிரியங்கா செயல்படுவார். திட்டக்குழு தலைவருக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை பெற்றுக் கொள்ளலாம்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். காலை 10 மணி முதல் 10.30 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்பப்பெறுதல் நடக்கிறது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் காலை 10.45 மணிக்கு வெளியிடப்படுகிறது.

11.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் உடனடியாக பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதில், திட்டக்குழு தலைவரை தேர்ந்து எடுப்பதற்காக 4 பகிர்மான குழு தலைவர்களும், அசல் தேர்தல் சான்றிதழுடன் வர வேண்டும். அதனைத்தொடர்ந்து, திட்டக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெறும். இதில் ஓட்டுப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...