கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் பைக் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை ரத்தினபுரியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் என்பவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலக வேலை சம்பந்தமாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது.

எங்கு தேடியும் கிடைக்காததால், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.



அதில், ஒரு இளைஞர், சுரேஷின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.



சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அந்த வீடியோவில் இருக்கும் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...