கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் பைக் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை ரத்தினபுரியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் என்பவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலக வேலை சம்பந்தமாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது.

எங்கு தேடியும் கிடைக்காததால், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.



அதில், ஒரு இளைஞர், சுரேஷின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.



சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அந்த வீடியோவில் இருக்கும் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...