கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த அரசு பேருந்து நடத்துனர் - பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்!

கரூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து நடத்துனர், கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நிலையில், நடத்துனரை பொதுமக்கள் பிடித்து சூலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நடத்துனரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கரூரிலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பல்லடம் பேருந்து நிறுத்தத்தில் காங்கேயம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் இறங்குவதற்காக அந்த பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவியிடம் பேருந்தில் இருந்த கொடுமுடியை சேர்ந்த நடத்துனர் ஞானசேகர் (57) ஆபாச வார்த்தையில் பேசி தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், அந்த பெண், கல்லூரி அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சக நண்பர்களை வரவழைத்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் இறங்கியவுடன் வேகமாக பேருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. உடனடியாக பெண்ணின் நண்பர்கள் பேருந்தை வழிமறித்து நடத்துனரை பிடித்து நடந்தவற்றை கேட்கும்போது நடத்துனர் அதற்கு ஒத்துழைக்காமல் இருந்துள்ளார்.



உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் நடத்துனரை பிடித்து சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவியிடம் நடத்துனர் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பெண்ணிடம் புகாரை பெற்றுக் கொண்ட சூலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் போக்குவரத்து துறையினரும் சூலூர் காவல் நிலையம் வந்து நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...