கோவையில் தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்காத பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம்!

கோவை மாநகராட்சியின் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா, மாநகராட்சியில் நடைபெற்ற கடந்த மூன்று கூட்டங்களில் பங்கேற்காததால் அவரது பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார். அடுத்த கூட்டத்தில் அவரது விளக்கத்தை தொடர்ந்து தகுதி நீக்கத்தை உறுதி செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டத்திற்கு வராத 97வது வார்டு பெண் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியில் 97வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிவேதா. இவர் மாநகராட்சி கூட்டங்களுக்கு நிவேதா வருகை தருவது இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவுன்சிலர் நிவேதா கடந்த ஜனவரி 30, மார்ச் 31-ந் தேதிகளிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.

தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.

அடுத்த கூட்டத்தில் தகுதி நீக்கம் குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கவுன்சிலர் நிவேதா அளிக்கும் விளக்கத்தை மாநகராட்சி கூட்டம் ஏற்றுக்கொண்டு, ஒருமனதாக அனுமதி அளித்தால் அவர் கவுன்சிலராக பதவி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

இல்லாவிட்டால் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகிவிடும். மாநகராட்சி சட்டம் 1998 பிரிவு 32 (1)-ன் படி 3 கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளாவிட்டால் தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளிக்கிறது.

அதேநேரம் சட்டப்பிரிவு 32 (4) தகுதி நீக்கத்தை இறுதி செய்வது மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அளிக்கிறது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...