கோவையில் பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட வழக்கு - கைதான இருவரும் தப்பிக்க முயன்ற போது விழுந்து கை உடைந்தது!

கோவை ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம், காரில் வந்து செயினை பறிக்க முயன்ற வழக்கில் கைதான இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது தடுக்கி விழுந்ததில் கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்று கைதான இருவர், போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது, தடுக்கி விழுந்து கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பீளமேடு ஹட்கோ காலணியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண், ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது, காரில் வந்த நபர்கள் அவரது கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதில், அவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் 24 மணி நேரத்தில் அபிஷேக் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை போலீசார் பிடித்த போது இருவரும் தப்ப முயன்றனர், அப்போது விழுந்ததில் அபிஷேக் குமாருக்கு வலது கையிலும், சக்திவேலுக்கு இடது கையிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...