திருப்பூரில் காவல்துறைக்கு புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் - மாவட்ட எஸ்.பி சசாங் சாய் துவங்கி வைத்தார்!

திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக புதிதாக இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.பி சசாங் சாய் கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களை பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் காவல்துறையினருக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விரைவாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்லும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான அவிநாசி, ஊத்துக்குளி, ஊதியூர் உள்ளிட்ட 12 காவல் நிலையங்களுக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த புதிய ரோந்து இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி எழுப்பக்கூடிய நவீன இயந்திரங்கள் மற்றும் ஸ்பீக்கர், மைக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...