கோவையில் ரோஜ்கார் மேளாவில் 371 பேருக்கு பணி நியமன ஆணை - மத்திய இணையமைச்சர் பங்கேற்பு!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் ஜான் பர்லா கலந்து கொண்டு, 371 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


கோவை: குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 371பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசு துறைகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின், மத்திய இணை அமைச்சர், ஜான் பர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அஞ்சல் துறை, தொழிலாளர் ஈட்டுறுதி கழகம் மற்றும் ரயில்வே துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 371 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் 25 பேருக்கு நேரடியாக மத்திய இணை அமைச்சர் ஜான் பர்லா ஆணை கடிதங்களை வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...