கோவை அருகே முறையான குடிநீர் விநியோகம் இல்லை - ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கோவை அடுத்த தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் குடிநீர் விநியோகிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் மாணிக்கராஜ் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் தீத்திபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 11ஆவது வார்டில் சரவணா கார்டன் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பொறுமையை இழந்த அப்பகுதி மக்கள் 11 வது வார்டு கவுன்சிலர் மாணிக்கராஜ் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களிடம் தீத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இனி வரும் நாட்களில் சீரான குடிநீர் கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஊராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...