கோவை அருகே முறையான குடிநீர் விநியோகம் இல்லை - ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கோவை அடுத்த தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் குடிநீர் விநியோகிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் மாணிக்கராஜ் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் தீத்திபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 11ஆவது வார்டில் சரவணா கார்டன் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பொறுமையை இழந்த அப்பகுதி மக்கள் 11 வது வார்டு கவுன்சிலர் மாணிக்கராஜ் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களிடம் தீத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இனி வரும் நாட்களில் சீரான குடிநீர் கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஊராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...