கோவையில் டிக்கெட் கேட்ட தனியார் பேருந்து நடத்துனரின் விரலை கடித்த நபர் கைது - பரபரப்பு!

கோவை - பொள்ளாச்சி இடையே செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வரும், உடுமலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (47) நேற்று பணியிலிருந்த போது, பேருந்தில் ஏறிய பிரின்ஸ் என்பவரிடம் டிக்கெட் கேட்டபோது, மதுபோதையில் இருந்த அவர், கிருஷ்ணகுமார் விரலை கடித்த நிலையில், அதை தடுக்க முயன்ற மற்றொரு பயணியின் விரலையும் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனர் விரலை பயணி ஒருவர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (47). இவர் கோவை - பொள்ளாச்சி செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற பேருந்தில் கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் (42), என்பவர் பயணம் செய்துள்ளார்.

சுந்தராபுரம் பொங்காளியம்மன் கோவில் அருகே பேருந்து வந்த போது கிருஷ்ணகுமார் பிரின்ஸிடம் டிக்கெட் எடுக்க அறிவுறுத்தியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த பிரின்ஸ் நடத்துனர் கிருஷ்ணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கிருஷ்ணகுமாரின் கைவிரல்களை கடித்ததோடு, தாக்கியுள்ளார்.

அப்போது நடத்துனரை காப்பாற்ற வந்த கிருஷ்ணசாமி என்பவரது கையையும் பிரின்ஸ் கடித்துள்ளார். அங்கிருந்த சக பயணிகள் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து கிருஷ்ணகுமார் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் பிரின்ஸிடம் விசாரணை மேற்கொண்டு, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...