தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும், திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் பதாகைகளை ஏந்தியபடி மண்டியிட்டு மனு அளித்தனர்.
கோவை: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடக் கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியானதை தொடர்ந்து இத்திரைப்படம் ஒரே நாள் மட்டுமே திரையரங்கில் ஓடியது. குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் இரண்டு நாட்கள் ஓடியது.

இதனையடுத்து பாஜக உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் இந்த திரைப்படத்தை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி திரையிட வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் திரைப்படம் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை.

இந்நிலையில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில், அந்த இயக்கத்தினர், இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி மண்டியிட்டு மனு அளித்தனர்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியானதை தொடர்ந்து இத்திரைப்படம் ஒரே நாள் மட்டுமே திரையரங்கில் ஓடியது. குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் இரண்டு நாட்கள் ஓடியது.
இதனையடுத்து பாஜக உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் இந்த திரைப்படத்தை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி திரையிட வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் திரைப்படம் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை.
இந்நிலையில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில், அந்த இயக்கத்தினர், இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி மண்டியிட்டு மனு அளித்தனர்.