கேஎம்சிஎச்-யில் நரம்பு இடையீட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் இரண்டாவது ஆண்டு மாநாடு துவக்கம்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கேஎம்சிஎச்) நரம்பியல் மருத்துவர்கள் சமீப ஆண்டுகளாக ரேடியோலஜி தொழில்நுட்ப இடையீட்டு மருத்துவ முறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு ரேடியோலஜி இடையீட்டுத் துறையும் மாறி வருகின்றன.

குறைந்த அளவு கருவிகளைக் கொண்டு அதிநவீன நரம்பு இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொள்ள, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மருந்துகள் போன்றவையும் சமீபகாலத்தில் சுலபமாக கிடைக்கின்றன.

உலக அளவில் நிபுணர்கள் மேற்கொள்ளப்படும் நரம்பு மருத்துவ இடையீட்டு கதிர்வீச்சு மருத்துவ துறைமாறி வரும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப தகவல்களை அறிந்தும், அறிந்தவற்றை பிற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொண்டும் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

இவற்றை இயக்கி வரும் கதிர்வீச்சியல் மற்றும் இடையீட்டியல்துறை தலைவர் மருத்துவர் மாத்யு செரியன், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மார்ச் 2 முதல் மார்ச் 4, 2017 வரை நரம்பு பாதிப்பு சிகிச்சை சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ருஸ் பல்கலைக கழக மருத்துவ மையம் மருத்துவர் டெமட்ரியஸ் லேபேஜ், மருத்துவர் டொனால்ட் பிரான்சிஸ் டென்வர், இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் எடராடோபொகார்டி, கனடாவைச் சேர்ந்த மருத்துவர் மயன்க்கோயல், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் மைக்கல் மாவாட், துருக்கியைச் சேர்ந்த மருத்துவர் நாசி கோசர், ஜெர்மனி சேர்ந்த மருத்துவர் ரெனே சாபட், மருத்துவர் ஹான்ஸ் ஹென்கஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுடன் நரம்பியல் கதிவீர்ச்சில் நிபுணத்துவம் பெற்ற 50 இந்திய மருத்துவர்கள், நரம்பியல் பிரிவு விரிவுரையாளர்கள், பங்கேற்று பயிற்சியும் கருத்தரங்களையும் நடத்தவுள்ளனர். 

நியுரோ இன்டர்வென்ஷன் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சு துறையின் தலைவர் மருத்துவர் மேத்யு செரியன், இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளராக பொறுப்பேற்று நடத்துகிறார். 

இந்த ஆண்டு மாநாட்டின் துவக்க நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் இத்தாலி, மிலன் நகரில் இருந்து வரும் மருத்துவர் எடராடோபொகார்டி, சர்வதேச அளவிலான விரிவுரை வழங்குகிறார். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் கற்றுத்தேர்ந்த அனுபவசாலி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...