வால்பாறை அருகே காட்டு யானை விரட்டியதில் கீழே விழுந்து பெண் படுகாயம்!

வால்பாறை அருகே உள்ள பிலண்டிவேலி எஸ்டேட் பகுதியை சேர்ந்த அமராவதி என்ற பெண் கடைவீதிக்கு சென்று திரும்பிய போது காட்டு யானை விரட்டியதில் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: வால்பாறை அருகே காட்டு யானை விரட்டியதில் தடுக்கி விழுந்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகே பிலண்டிவேலி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் சின்னசாமி (57) என்பவரது மனைவி அமராவதி (47) ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர்.

இதனிடையே இன்று காலை 7 மணி அளவில் வீட்டில் இருந்து கடை வீதிக்கு சென்ற அமராவதி தனது உறவினர்களை அழைத்து மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை இவர்களை விரட்டியது.

யானையை பார்த்து அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில் அமராவதி ஒட முடியாமல் தடுக்கி கீழே விழுந்து உள்ளார்.

இதில் அவருக்கு கை, கால், தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் எஸ்டேட் வாகனத்தில் வால்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே தகவல் அறிந்து வந்த வால்பாறை வனச்சராக வனத்துறையினர் யானையை வனப்பகுதியில் இருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...