திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த நடிகை நமீதா!

திருப்பூரில் பாஜக சார்பில் துவங்கப்பட்ட மின்னொளி கிரிக்கெட் போட்டியினை திரை நட்சத்திரமும் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்து கொண்டு பவுலிங் மற்றும் பேட்டிங் விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளை துவக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெறும் மின்னொளி கிரிக்கெட் போட்டியை நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா துவங்கி வைத்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அங்கேரிபாளையம் சாலையில் மாநில தலைவர் அண்ணாமலை கோப்பைக்கான மின்னொளி கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளுக்கான கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது.



இதனை மாநில பொதுச் செயலாளர் கே.பி. முருகானந்தம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும் திரை நட்சத்திரமான நமீதா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



முன்னதாக மேடையில் பேசிய நமீதா, எந்த கட்சியிலும் இல்லாத அளவு கட்சியினை குடும்பம் போன்ற ஒற்றுமையாக கொண்டு செல்வதற்கு இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்றார்.

தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் பௌலிங் மற்றும் பேட்டிங் என விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமீதா பேசியதாவது, கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து வருத்தம் இருந்தாலும் கூட இந்த முறை இல்லை எனில் அடுத்த முறை என ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை நோக்கி செயல்பட கட்சி தயாராகி வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் பாஜகவின் நிர்வாகிகள் 24 அணிகளாக பிரிந்து ஏழு ஓவர் கிரிக்கெட் போட்டிகளை விளையாட உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...