கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி - முதலமைச்சர் யார் என நாளை தேர்வு!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் யார் என தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளைய தினம்  நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என நாளை தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும் இந்த தேர்தலில், ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

வரும் 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த தேர்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. பாஜக 65 இடங்களிலும், மஜதா 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த அமோக வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சர் யார் என்பது தேர்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் வர உள்ளனர். முதலமைச்சர் பதவிக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய முதலமைச்சர் பதவி ஏற்பு விழா வரும் 17 அல்லது 18ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி கிடைத்துள்ளதால், கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...