இச்சிப்பட்டி ஊராட்சியில் கள்ளச்சாராய விற்பனை அமோகம் - கிராமசபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி!

பல்லடம் அடுத்த பெத்தாம்பூச்சி பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சி முழுவதும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி அதிகாரிகளிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சி முழுவதும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிப்பட்டி ஊராட்சியில் கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களை வரவழைத்து விட்டு ஊராட்சி தலைவரும் வார்டு உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதன் காரணமாக தங்களது குறைகளையும் புகார்களையும் ஊராட்சி நிர்வாகத்திடம் சொல்ல முடியவில்லை என்றும், மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இச்சிப்பட்டி கிராம மக்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெத்தாம்பூச்சிபாளையத்தில் மீண்டும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரவில்லை. 100 குடும்பங்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடத்தை ஊராட்சி நிர்வாகத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டும் இதுவரை சாலை அமைத்து தரவில்லை எனக்கூறி பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இச்சிப்பட்டி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் போலியான மது பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் வேலைக்கு வராமல் தொழில் பாதிப்பு அடைவதாகவும் கிராம சபை கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் திடீரென ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலி மது பாட்டில்கள் விற்பனை குறித்து பலமுறை ஊராட்சி தலைவரிடமும் காவல்துறையிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலி மது பாட்டில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணியிடம் கேட்டபோது, போலி மது பாட்டில் விற்பனையை தடுக்கும் வகையில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காவல்துறையிலும் மனு அளித்துள்ளோம் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே கிராம சபை கூட்டத்தில், தங்களது கோரிக்கைகள் குறித்து பேச வந்த பொது மக்களுக்கு மைக் கொடுக்காமல் எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் என பொதுமக்களை பேசவிடாமல் தடுத்த நிகழ்வும் அரங்கேறியது.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...